Wednesday, September 26, 2018

சிவ பெருமானின் அட்ட வீரட்ட தலங்கள்

அட்ட வீரட்ட தலங்கள் என்பது சிவபெருமானின் வீர தீர செயல்களை விவரிக்கும் கோவில்கள் ஆகும்.
சிவ பெருமானின் திரு விளையாடல் புரிந்த இடங்கள்,அருள் புரிந்த இடங்கள் ஆற்றலை வெளிபடுத்திய இடங்கள்,சிவபெருமானின் படை வீடுகளாகவும் இத்திருதலங்கள் கருதப்படுகின்றது.
அவையாவன
1.திருக்கண்டியூர் 
2.திருக்கோவிலூர் 
3.திருவதிகை
4.திருப்பறியலூர்
5.திருவிற்குடி
6.திருவலுவூர்
7.திருக்குறுக்கை 
8.திருக்கடவூர்.
*இவை அனைத்தும் அட்ட வீர தலங்கலாக அழைக்கப்படுகின்றன.
*மேலும் இந்த அஷ்ட தலங்கள் அணைத்தும், அணைத்து தரப்பு மக்களாலும் பராமரிக்கப்பட்டு போற்றி இன்றளவும் வணங்கப்படுகின்றது.
*இவற்றில் ஆறுக்கும் மேற்பட்ட கோவில்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலும் மற்ற கோவில்கள் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றிலும் மிகவும் எழில் கூடிய சிற்ப வேலைபாடுகளுடனும் ஒவ்வொரு கோவில்களுக்கும் அதற்குரிய கட்டிட கலை வேறு பாடுகளுடனும் மிகவும் பிரம்மிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.*
*இந்த அட்ட வீரட்ட தளங்களில் சிவபெருமான் தன்னுடைய வீர செயல்களால் பல்வேறு தரப்பட்ட கடவுள்களையும் வதம் செய்து அவர்களுக்கு முக்தி அழித்து காத்து வருகின்றார் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.
*ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட வரலாறுகள் கூறப்படுகின்றன.
*ஒரு சில வரலாற்று கதைகளை கேட்கின்ற பொழுது மிகவும் மிகைபடுத்தியும், ஒரு சில கதைகளில் எதார்த்தமாகவும் ஒரு சில கதைகளில் மிகவும் பிரமிக்க செய்யும் வகையிலும் பல நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டி இருப்பார்கள் நம் வரலாற்று நாயகர்கள்.*
*நம் மக்களுக்கு எப்படி ஒரு நிகழ்வை கூறினால் அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்*
*அட்ட வீரட்ட தளங்களும் அந்த தளங்களில் அவர் யாரிடம் வீர தீர சூட்சமங்களை செய்து வென்று காட்டினார் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தை கொய்த தலம்.
2.திருக்கோவிலூர் - அந்தகாசூரனை வதம் செய்த தலம்.
3.திருவதிகை - அவுணர்களை எரித்த தலம்.
4.திருப்பறியலூர் - தக்கன் யாகம் தகர்த்து அவன் தலையை கொய்த தலம்.*
5.திருவிற்குடி - சலந்தராசூரனை சக்கரா ஆயுதத்தால் அடித்த தலம்.
6.திருவலுவூர் - யானையை உரியேர்ந்த தலம்.
7.திருக்குறுக்கை - மன்மதனை எரித்த தலம்.
8.திருக்கடவூர் - மார்கண்டேயனுக்காக எமனை உதைத்த தலம்.

Tuesday, September 25, 2018

அண்ணாமலை கிரிவலமந்திரம்*

அண்ணாமலை கிரிவல மந்திரம்*
       ஒவ்வொரு முறையும்அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;அப்படி
14 கிமீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;நம் பாவப் பிணியை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கும்.
    இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்; முறைப்படி தீட்சை பெற்றவர்கள், உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள், முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;
    பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;
    தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;
   காலையில்,மதிய நேரத்தில், மாலையில், இரவில்,நள்ளிரவில், பின்னிரவில்,அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
    மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;
   சிவனை அப்பாவாக,நண்பனாக, மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை சூட்சுமமாக உணருவார்கள்; 1008 முறை வலம் வந்தவர்களுக்கு அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
    ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;
1.முதல்முறை கிரிவலம் செல்லும் போது
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
     நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் சிவ மகிமையை பரப்பினார்; எனவே, குருவின் அருள் நமக்குத் தேவை.
   3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அதை கிரிவலத்தின் போது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்.
2.இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா
    இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்.
3.மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-
ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
     மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்.
4.நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;
ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்.
5. முறை கிரிவலம் செல்லும் போது:
அருணாச்சல சிவ
அண்ணாமலையாரின் சிவ மந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்.
6.ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:
ஓம் ஆம் ஹெளம் செள
      அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
7.ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:
  சிவையை நம
அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது.
8.எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
ஓம் ரீங் சிவசிவ
    சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்.
9.ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:
சிவாய நம
    நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது.
10.பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
     ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.
11.பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;
சிவசிவ
     இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;
12.பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
சிவாய சிவாய
     நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது.
13.பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
சிவாய நம ஓம்
     சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால்.
14.பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:
சிவயசிவ
   இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது.
15 ஆம் முறை கிரிவலம் செல்லும் போது:
அருணாச்சலாய சிவ நமஹ
16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;இறுதியில் அவரே உங்களை ஏற்றுக் கொள்வார்
 மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ.

Saturday, August 27, 2016

திருவண்ணாமலை மாவட்டம்

1.அருள்மிகு ப்ரித்ரியங்கா தேவி ஆலயம்,ராணீப்பேட்டை,வேலுர்.

Saturday, January 9, 2016

கோவை மாவட்ட ஆலயங்கள்.

1.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,மருத மலை.
சற்ப்ப தோசம் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த இடம்.மருத மரம் தலவிருட்சம்.
2.ஸ்ரீ தசவாதாரப் பெருமள் ஆலயம்,தீர்த்திபாளயம்,தெலுங்குபாளயம்.
3.ஸ்ரீ கோணி அம்மண் ஆலயம்,டவுண் ஹால்,கோவை.
4.ஸ்ரீ தண்டு மாரிஅம்மண் ஆலயம்,கோவை.
சற்ப்ப தோசம் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
5.அருள்மிகு ஆதிகனேசர்,சுப்ரமணியர் திருக்கோயில்,பீளமேடு,கோவை.
6.ஸ்ரீ.ருக்குமணி சத்தியபாமா,வேணுகோபால் ஆலயம்,கணபதி,
7.அருள்மிகு துர்க்கை அம்மன் அருள்மிகு,தெலுங்குபாளயம்.
8.அருள்மிகு நவசக்த்தி அம்மன் ஆலயம்,நாயக்கன்பாளைம்,
9.அருள்மிகு வேம்ப காளியம்மன் ஆலயம்,கே.ஜி புதுர்,கோவை-29.
வேம்ப குல குலதெய்வம்,
10,ஸ்ரீவீரமார்த்திஅம்மன் திருக்கோயில்,வடவள்ளி,கோவை.
11.அருள்மிகு தஜபுஜ மஹாலட்சுமி திருக்கோயில்,தடாகம்,கோவை.
12.அருள்மிகு காயத்ரி தேவி திருக்கோவில்,வேடபட்டி.
13.

Monday, November 23, 2015

சனிக் கிரக தோச பரிஹார ஸ்தலம்.

1.அருள்மிகு சனீஸ்வர பெருமான் ஆலயம்,ராஜாஜி நகர்,பெங்களுர்,
   சனிக் கிரக தோச பரிஹார ஸ்தலம்.
2.சனீஸ்வரர் கோவில், ஸ்ரீ  தர்பாரன்யேசுவரர் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன்    கோவில்,திருநள்ளாறு ,
3.அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்.தென்பொன்பரப்பி.
   தாயார் : உமையாள், சொர்ணாம்பிகை.
  சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செயலாம்.
  கடன் தொல்லை நீங்கும்.செங்கல்பட்டுமாவட்டம்.
4. "சுயம்பு லிங்க ரூபம்,குச்சனூர்,தேனி மாவட்டம்.

கர்னாடக மாநில ஆலயங்கள்.

1.அருள்மிகு சனீஸ்வர பெருமான் ஆலயம்,ராஜாஜி நகர்,பெங்களுர்,
சனிக் கிரக தோச பரிஹார ஸ்தலம்.