அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்
இது முக்தி தலம்
இறைவன் பட்டீசுவரசுவாமி இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் குளிர்ச்சியாகத் திருப்பெயர்கள், சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது. ஆஞ்சநேயர், ஸ்ரீமாய கிருஷ்ணர் என்று அங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.
பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், இக்கோயிலில் பலவிதக்கலைப்பாணிகளும் சங்கமித்துள்ளது அதிசயமில்லை என்று புரிகிறது. அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர். பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டு வரை, பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி, விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம் - என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசரகளின் கொடி நாட்டிய இடம் இப்பகுதி.
‘ஆரூரார் பேரூரார்’ என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும்’ என்றும் அப்பர் சுவாமிகள் தனது சேஷத்திரக்கோவையில் இரண்டிடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே சுமார் கி.பி. 650க்கு முன்னரே பேரூர் பட்டிசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். பேரூர் பற்றிய தனித்தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.
பேரூர்,
பேரூர்,
கோயமுத்தூர் - 641 010.
No comments:
Post a Comment