Monday, January 26, 2015

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,சிவன்மலை .

காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.
இக் கோயிலின் முகவரி: 
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், 
சிவன்மலை, 
காங்கயம் வழி,
 திருப்பூர் மாவட்டம், 
தமிழ்நாடு -638701.
 பேருந்து நிலையம்: காங்கயம், 
ரயில்நிலையம்: திருப்பூர்; 
விமான நிலையம்: கோயம்புத்தூர்.
சிறப்பு;இக் கோவிலில் திருமணம் செதால் பதினாரும் பெற்று
பல்லாண்டு நலமுடன் இருப்பர்கள்.
சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.
ருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.
வரலாறு
சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் வரலாறு உள்ளது.

No comments:

Post a Comment